பயணிகளின் பாதுகாப்பிற்காக கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவைப்பட்டால் ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலைகள் ஏற்பட்டன.