NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிற்செய்கை முற்றாக சேதம்!

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் நெற்பயிற்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

அதன்படி எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை, கச்சாய், கைதடி, நாவற்குழி, தச்சன்தோப்பு மற்றும் தனங்கிளப்பு நெல் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை குடியிருப்புகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், கால்நடைகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles