NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து!

அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க நோக்கி பயணத்து கொண்டிருந்த 4 வாகனங்கள் பேலியகொடை இடமாறல் பகுதியில் பணம் செலுத்தும் இடத்திற்கு அருகில் வரிசையில் நின்றபோது பின்னால் வந்த கெப் வண்டியொன்று 4 கார்களுடன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் குறித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெப் வாகனத்தின் வேகக்கட்டுப்பாடு இழந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles