NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அயோத்தி ராமர் கோயிலுக்கு உலகின் மிகப்பெரிய பூட்டு பரிசளிப்பு…!

அயோத்தியில் இராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நெருங்கிவரும் நிலையில் உலகின் மிகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு பிரசாதம் அயோத்தியை சென்றடைந்தது. 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நிர்மானிக்கப்பட்டுள்ள இராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா நாளை மறுநாள்(22) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். 

கோயில் பிரதிஷ்டைக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நன்கொடைகளையும், பரிசுப் பொருள்களையும் அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். 

அந்தவகையில், 400 கிலோவிலான உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவியை அலிகாரில் இருந்து அயோத்திக்கு சென்றடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. 

அலிகார் மாநிலம் நோரங்காபாத்தில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா தம்பதியரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு செய்யப்பட்டது. சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்

அதேபோன்று ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் மூலம் 1,265 கிலோ லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles