NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒன்லைன் நிதிமோசடி சம்பவங்கள் அதிகரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஒன்லைன் நிதி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், நிதித்துறை பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கியாளர்கள் சங்கம், டுயமெயீயல மற்றும் குinஊளுஐசுவு ஆகியவை ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளன. அத்துடன், மொபைல் சாதனங்களை குறிவைத்து ஒன்லைன் மோசடிகள் பற்றிய பல அறிக்கைகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தன.

குறித்த அறிக்கையில், ‘கவர்ச்சிகரமான ஒன்லைன் சலுகைகளாக பல நிதிமோசடி சம்பவங்கள் குறித்து நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம். இது மொபைல் சாதன பயனர்கள் கவனக்குறைவாக அறியப்படாத இணைப்புகளைக் கிளிக் செய்து தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு வழிவகுத்துள்ளது.

இந்த செயலானது மோசடி செய்பவர்களுக்கு மொபைல் சாதனத்திற்கான முழுமையான அணுகலை வழங்குகிறது. மேலும் அவர்கள் அதை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த முடியும்.

மோசடி செய்பவர்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட வங்கி அல்லது பணம் செலுத்தும் பயன்பாடுகளுக்கு எளிதாக அணுகலைப் பெறுகிறார்கள். இதனால், வங்கிக் கணக்குகள் மற்றும் கட்டண அட்டைகளில் இருந்து நேரடியாகத் திருட அனுமதிக்கிறது. சமூக ஊடக தளங்கள், இணையதளங்கள் மற்றும் ஒன்லைன் செய்தியிடல் பயன்பாடுகள் ஆகியவை பயனர்களை கவரும் வகையில் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான தளங்களாகும்.

மேலும், மோசடி செய்பவர்கள் மொபைல் சாதனத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதால் மட்டுமே மோசடி நடவடிக்கைகள் நடந்துள்ளன என்றும், வங்கி அல்லது பணம் செலுத்தும் செயலிகளின் பாதுகாப்பு பாதிப்பு காரணமாக அல்ல. அரசு மற்றும் தனியார் வங்கிகள் தங்களது ஒன்லைன் விண்ணப்பங்களை உருவாக்கும் போது சர்வதேச பாதுகாப்பு தரங்களை கண்டிப்பாக கடைபிடிக்கின்றன.
மேலும், ஒன்லைன் மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படவும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles