NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவில் இடம்பெற்ற தங்கத்திருட்டில் இலங்கையர் உட்பட 9 பேர் கைது!

கனடா – டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற  தங்க திருட்டு தொடர்பாக நேற்றைய தினம்  (18) ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பிராந்திய பொலிஸ் நிலையம்  தெரிவித்துள்ளது.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு  நடந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையடித்த சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழர் ஒருவரும் அடங்குகின்றார்.

சுமார் 1 வருட காலத்திற்கு முன்னர் பியர்சன் விமானநிலையத்தில் வைத்து சுமார் 20 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 400 kg  எடைகொண்ட  6600 தங்க கட்டிகள் 09 பேர் கொண்ட குழுமூலம் கொள்ளையடிக்கப்பட்டது .  

இதனை  தொடர்ந்து  நேற்று  குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும்  பொலிஸாரால்  அடையாளம் காணப்படுள்ளனர் .இதில் தமிழர் ஒருவர் இடம்பெறுள்ளமை பெரும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

37 வயதான ஒருவரே குறித்த திருட்டில் பங்கேற்றதாக சந்தேகத்தின் அடிப்படிடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது துப்பாக்கி கடத்தல்கள் ஆயுத விநியோகங்கள் தொடர்பாக பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே பதிவாகியுள்ளன  .

இவர் மட்டுமல்லாமல் இவருடன் சகாக்கள்  08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles