NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காபோனில் இடைக்கால ஜனாதிபதியாக ‘பிரைஸ் நிகுமா‘

காபோனில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் இடைக்கால ஜனாதிபதியாக ஜெனரல் பிரைஸ் நிகுமா இன்று பதவியேற்றுள்ளார்.

ஜெனரல் பிரைஸ் நிகுமாவுக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது. எனினும், 55 ஆண்டுகால அலி போங்கோவின் குடும்ப ஆட்சியின் தொடர்ச்சியாக ஜெனரல் நிகுமாவின் ஆட்சி இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

காபோனில் அண்மையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இத் தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய இராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் திகதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது.

இதனையடத்து அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்த்த இராணுவக்குழுவின் தலைவரான ஜெனரல் பிரைஸ் நிகுமா, நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles