NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிராம சேவகர்கள் இரு நாள்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

கிராம சேவகர்கள் அனைவரும் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் நாளையும் (6,7) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

 நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து கடமைகளில் இருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சங்கத்தின் பிரதம செயலாளரான ஜெகத் சந்திரலால், கிராம உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையானது “பொறுத்தது போதும்;” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles