NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பிள்ளை பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் சர்வோதய சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணும் அவரது பிள்ளையும் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது 2 வயது பிள்ளை உயிரிழந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles