NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெற்கு சோமாலியாவில் மர்மப்பொருள் வெடித்து 27 சிறுவர்கள் பலி…!

தெற்கு சோமாலியா, கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உட்பட பலர் விளையாடி கொண்டிருந்த போது, அங்கு கிடந்த மர்மப்பொருள் வெடித்து , 27 சிறுவர்களின் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .

மேலும், 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதுடன், விசாரணையின் போது , அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு எனவும் தெரிய வந்துள்ளது.

https://www.maalaimalar.com/news/world/27-children-tragically-killed-in-somalia-blast-620812?infinitescroll=1
Share:

Related Articles