NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நண்பர்களுக்கிடையில் வாக்குவாதம்-பறிபோன உயிர்.

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரண்டு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில், வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles