NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பல்லேகல – தன்னேகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சிறுவர்கள் உறவினர்களுடன் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுவர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவர் நேற்று முன்தினம் (24) உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (25) உயிரிழந்துள்ளது.

அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

Share:

Related Articles