NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் இணையும் முன்னாள் வீரர்கள் !

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, முன்னாள் வீரர்களான இன்சமாம் உல் ஹக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகிய இருவரும் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூவர் அடங்கிய குழுவானது பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டையும், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகக் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேபோல, இந்த தொழில்நுட்பக் குழு கிரிக்கெட் விளையாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரிடம் தெரியப்படுத்தும். மேலும், அந்த முடிவுகளை செயல்படுத்துகின்ற உரிமையும் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டை கட்டமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குதல், திட்டமிடல், விளையாடும் சூழ்நிலைகள், தேசிய தேர்வுக் குழுக்களின் நியமனம், தேசிய அணி பயிற்சியாளர்கள் நியமனம், போட்டி நடுவர்கள், மத்தியஸ்தர்கள் நியமனம், வீரர்களுக்கான ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் உட்பட, கிரிக்கெட் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் இந்த மூவர் அடங்கிய குழு பரிந்துரைகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles