NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழ் – அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்!

யாழ்ப்பாணம் – ஊர்க்காவற்துறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் தனியார் பஸ் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles