NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கில் கடந்த ஒரு வருடத்தில் 50 வைத்தியர்கள் வெளியேற்றம்!

வட மாகாணத்தில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலிருந்து வெளியேறியுள்ள வைத்தியர்களில் தொழில்சார் கல்விக்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பாதவர்களும் உள்ளதாக சுட்டிக்காட்டிள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் காலங்கள் வட மாகாணத்தின் சுகாதார துறைக்கு மிகவும் சவாலானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles