NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்ச்சையை தீர்ப்பதற்கான கூட்டம் இன்று !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் சர்ச்சையை தீர்ப்பதற்கான கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு 10, தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆசன அமைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Share:

Related Articles