NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குறிகாட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய நபர் ஒருவரின் சடலம்..!

குறிகாட்டுவான் கடற்பரப்பில் நபரொருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது.
நேற்று மாலை குறித்த சடலமானது கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் ஆண் ஒருவருடையது என்பதுடன் சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதால் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்,இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles