NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடருந்தில் மோதி இளைஞன் உயிரிழப்பு..!

கடுகன்னாவ மற்றும் பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம்(21) மாலை இடம்பெற்றது.

கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பேராதனை வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles