NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்..!

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களும் சென்றுள்ளார்.

காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் ருசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களும், பிரதேச மக்களுமாக தேடி வருகின்றனர்.

மேலும்,காணாமல் போன சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles