NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் கேமி சூறாவளியினால் 50 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் ஏற்பட்ட கேமி சூறாவளியினால் பாதிக்கப்பட்டு 50 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் காணாமல் போயுள்ளனர்.

1,700இற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளதுடன், 2,500 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அந்த பகுதியில் தொடர்ந்தும் மழை அதிகரித்துள்ளதால் 23,500 இற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles