NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உப தபால் மா அதிபர் ராஜித.கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று அமையப்பெறுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும்.

இதனால் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், இன்று தமது கையொப்பத்துடன் அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு உப தபால் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் 10 ஆம் 11ஆம், 12ஆம், 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும் வீடு தோறும் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

14ஆம் திகதிக்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் 18 ஆம், 19ஆம், 20ஆம் திகதிகளில் தமது பிரதேசத்திற்கு கடிதங்களை விநியோகிக்கும் தபால் நிலையத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதுடன்,

தமக்குரிய வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக சிரேஷ்ட உப தபால் மா அதிபர் ராஜித.கே.ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles