NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில் இதுவரையில் 869 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 869 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 845 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 16 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிடைக்கப்பெற்ற 869 முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 146 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles