NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

மாத்தறை – பாபுரண பிரதேசத்தில் சொகுசு வண்டியொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று குறித்த கெப் ரக வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட குறித்த கெப் வாகனம், ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த வாகனம் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles