NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பூண்டுலோயா டன்சினன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படும் அபாயம்!

பூண்டுலோயா டன்சினன் தொழிற்சாலை பிரிவிற்குற்பட்ட மாடிவீட்டு பகுதியில் மிக பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே குறித்த அபாயகரமான பகுதியில் சுமார் 10 குடும்பங்கள் தற்போது வசித்து வருவதாகவும் அவர்களை மிக விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கிராம உத்தியோகத்தர் மற்றும் தோட்ட அதிகாரிகள் மூலம் வழியுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது தற்காலிகமாக தோட்ட பழைய சிறுவர் பராமரிப்பு நிலையம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles