NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பசறை டெமேரியா பகுதியில் பாரிய மரம் முறிந்ததில் போக்குவரத்து பாதிப்பு!

சீரற்ற காலநிலையின் காரணமாக அதிகளவிலான காற்றினால் இன்று காலை பசறை டெமேரியா பகுதியில் பாரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீதியில் விழுந்துள்ளது.

இதனால் தேயிலை கொழுந்து சேகரிக்கும் இடம் மற்றும் சிகை அலங்கார நிலையம் ஒன்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பசறை பகுதியில் இருந்து டெமேரியாஇ மஹத்தன்னஇ மீரியபெத்தஇதம்பேவெல ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தினை அகற்றும் பணிகளை ஊர் மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles