இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையமைப்பில் எதிர் வருகின்ற ஜூன் 5 ஆம் திகதி திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம்தான் தக் லைப்.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கூறிய ஒரு விடயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது, அதாவது ”தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது” என்று அவர் கூறியதற்கு தற்போது கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். மோலும் கமல்ஹாசன் அவர்கள் அப்படி கூறியமைக்கு எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேட்க அதற்கு கமல் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகாவில் தக் லைப் திரைப்படத்தினை திரையிட விடமாட்டோம் என வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

இதனால் இத்தடை உத்தரவினை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்திற்கு மனு கொடுத்திருக்கிறார். மனுவில் கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட பட்டிருந்தது.
இந்நிலையில் இத் தீர்ப்பு இன்றையதினம் விசாரணைக்கு வந்தது, தீர்ப்பானது நடிகர் கமல்ஹாசனுக்கு சார்பாகவே வந்தது. திரைப்பட வெளியீட்டின் பொது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.