NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட புகையிரதம் – மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு…!

கொள்ளுப்பிட்டியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர புகையிரத சேவை  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் இன்று (27) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதமே கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் புகையிரதம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கொழும்பிலிருந்து செல்லும் பயணிளுக்கு அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles