அக்குரஸ்ஸ – பங்கம தெதியகல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த 25 வயதுடைய குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவர், காயமடைந்த பெண்ணின் மைத்துனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர், அக்குரஸ்ஸ பகுதியில் துப்பாக்கியுடன் இன்று(28) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.