NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த பெரும் போகத்தில் நெற்செய்கை விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை இலவசமாக வழங்கத் தீர்மானம்…!

எதிர்வரும் பெரும் போகத்தில் நெற்செய்கை விவசாயிகளுக்கு மற்றுமொரு தொகுதி இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமாக பதில் கிடைத்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த பெரும் போகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களுக்கு பதிலாக விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, விவசாயிகள் இரசாயன உரங்கள் அல்லது சேதன உரங்களை தனியார் அல்லது அரச உர கூட்டுத்தாபனத்தில் கொள்வனவு செய்யலாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles