NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அன்டிபயோடிக் எடுத்துக்கொண்ட மேலுமொருவர் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கேகாலை வைத்தியசாலையில் அன்டிபயோடிக் மாத்திரையை எடுத்துக்கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவருக்கு 13 அன்டிபயோடிக் கொடுக்கப்பட்ட நிலையில், 14ஆவது அன்டிபயாட்டிக் கொடுக்கும் போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அன்றைய தினம் அன்டிபயோடிக் வழங்கப்பட்ட 19ஆவது நோயாளி அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கேகாலை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 57 வயதான கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles