அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வீசிவரும் கடும் பனிப்புயல் காரணமாக மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் பனிப்புயலால் வீதிகள், புகையிரத நிலையங்கள், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
பனிப்புயலுடன், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடுமையாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மேரிலெண்ட் மாகாணத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பனிப்புயலால் ஆயிரத்து 400க்கும் அதிகமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பனிப்புயல் தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.