அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தின் தெற்கு பகுதியில் மிகப்பெரிய சதுப்பு நிலம் காணப்படுகிறது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் முழுமையாக மற்றைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.
இதற்கிடையே அங்கு காலையில் கடும் பனிப்பொழிவு உருவானது. இந்த பனிப்பொழிவுடன் தீயில் இருந்து வெளியேறிய புகையும் சேர்ந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள வீதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.
மூடுபனி காரணமாக எதிரே வந்த வாகனங்கள் தெரியாததால் முன்னால் வந்த கார் மீது அந்த லொரி மோதியது. இதில் அந்த டேங்கர் லொரியில் இருந்து வேதிப்பொருட்கள் கசிந்து மேலும் புகைமூட்டமாக மாறின. எனவே ஒன்றன்பின் ஒன்றாக 168 வாகனங்கள் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பாரிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 63 பேருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.