NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசியல்வாதிகளின் வீடுகளை நோக்கி விரியும் வீதி திட்டங்கள்!

கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு மற்றும் மேம்பாடுகளை நடைமுறைப்படுத்தும் 100,000 கிலோமீற்றர் வீதி விரிவாக்கல் வேலைத்திட்டத்தினால் திறைசேரிக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேசிய, மாகாண மற்றும் கிராமப்புற வீதிகள் பயணத்தை எளிதாக்குவதற்கும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் புனரமைக்கப்பட வேண்டும் என்பதே இலக்காகும்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு வீதி வலையமைப்பையும் மீண்டும் புனரமைப்பதும், சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு நவீனமயமாக்குவதும், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு வீதிகளுக்கான உயர் மட்ட அணுகலை எளிதாக்குவது, பைபாஸ் வீதிகள் மற்றும் சந்திப்புகளை மேம்படுத்துவது மற்றும் நகரமயமாக்கப்பட்ட மையங்களுடன் எட்டாத கிராமப்புறங்களை இணைப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

எவ்வாறாயினும், இந்த முன்மொழியப்பட்ட நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் மாறாக, முடிக்கப்பட்ட வேலைகளில், புனரமைக்கப்பட்ட பெரும்பாலான கிராமப்புற வீதிகள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் சொத்துக்களை ஆளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது ஐந்தாண்டு திட்டமாக இருந்தபோதிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles