அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம்இ எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி வரை இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்டம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்துஇ இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளைஇ மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன்இ மூன்றாம் தவனண கற்றல் செயற்பாடுகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.