NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் தொடர்பில் பிரதமரின் அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நாட்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய, அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குமாறும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் தகவல் பெறுவதற்காக எல்ல பிரதேச செயலகத்திற்கு சென்ற நபர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles