NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிய கிண்ணக் கால்பந்துப் போட்டி – முதல் ஆட்டத்தில் ஜோர்தான் வெற்றி!

ஆசிய கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது.

இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தான் அணிக்காக மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். அல்-டமாரியின் முதல் கோல் பெனால்டி மூலம் விழுந்தது.

மற்றோர் ‘இ’ பிரிவு ஆட்டத்தில் பஹ்ரேனை 3-1 எனும் கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது. பிற்பாதியாட்டத்தில் பிரான்சின் பி.எஸ்.ஜி குழுவில் விளையாடும் லீ காங்-இன் இரண்டு கோல்களைப் போட்டு தென்கொரியாவை வெல்லச் செய்தார்.

38ஆவது நிமிடத்தில் ஹுவாங் இன்-பியோம் தென்கொரியாவை முன்னுக்கு அனுப்பினார். பின்னர் 51ஆவது நிமிடத்தில் அப்துல்லா டுவாஜி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

அதற்குப் பிறகு காங்-இன் இரண்டு கோல்களைப் போட்டார்.

‘டி’ பிரிவில் ஈராக், இந்தோனேசியாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்தோனேசியா, மலேசியா ஆகிய இரண்டு நாடுகளும் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles