மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த சுமார் 63 அகதிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி படகில் பயணித்த போது இந்த படகு கேப் வெர்டே தீவு அருகே திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேகச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர்.
மேலும், அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி படகில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்துள்ளது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கியதுடன், தகவலறிந்து மீட்புக் குழுவினர் 56 உடல்களை மீட்டதுடன் மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருவதாக ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.