திருகோணமலை – கோமரங்கடவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த மோதலில் காயமடைந்த ஐவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் யுவதி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிற நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.