இந்திய – இலங்கைக்கான கப்பல் சேவை தற்போது தொடங்கப்பட்ட நிலையில் இன்று பயணப்படவிருந்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது.
காலை 7.30 முதல் 8.30 மணிக்கு புறப்படவிருந்த கப்பல் திடீரென இரத்தானதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சோதனை ஓட்டத்தின் போது கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நாகையில் இருந்து புறப்படவிருந்த கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டது.
இலங்கைக்கு கப்பலில் கடல் வழி பயணம் மேற்கொள்ள 40பயணிகள் முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.