NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய மீனவர்கள் 19 பேர் அதிரடி கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் உட்பட அவர்களது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் , கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று (14) நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles