(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இன்று சர்வதேச யோகா தினமாகும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா பயிற்சி அவசியமாகும்.
யோகா என்பது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலைகளில் ஒன்றாகும்.
இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகா கலையை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐ.நா சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.