NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று பல பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு…!

அளுத்கமை, மத்துகமை, அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய விஸ்தரிப்பு பணிகள் முன்னெடுக்கவுள்ளதால் இன்று பல பகுதிகளுக்கு 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.

அதன்படி, இன்று காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, வாதுவை, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, போம்புவல, கட்டுக்குருந்தை, நாகொட, பயாகல, மக்கொனை, தர்காநகர், அளுத்கமை, களுவாமோதர, மொரகல்ல, பிலம்னாவத்த மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles