NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், வார இறுதியில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேலும், பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடுமா இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் பாராரளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இன்று விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், வார இறுதியில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

மேலும், பாராளுமன்றம் ஞாயிற்றுக்கிழமை கூடுமா இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறும் பாராரளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles