நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்,சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் இன்று (04) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது.