இலங்கைக்கான பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ராஜதந்திரியான அன்ட்ரூ பேட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை உயர்ஸ்தானிகராக பதவி வகித்த சாரா ஹல்டன், தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையிலேயே பேட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்ட்ரூ பெட்ரிக் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.