NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இலங்கைக்கான வரவு செலவு திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவாக 700 மில்லியன் டொலர்களை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

இந்நிதியில் சுமார் 500 மில்லியன் டொலர்கள் வரவு, செலவு நிதி திட்டத்துக்காக ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள 200 மில்லியன் டொலர்கள் நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நலன்புரி திட்டத்திற்காக ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles