NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் RM Parks நிறுவனம்!

அமெரிக்காவை தலைமையக்கமாகக் கொண்ட RM Parks நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்கான 20 ஆண்டு ஒப்பந்தத்தில் குறித்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் கையெழுத்திட்டது.

இதன்படி, RM Parks நிறுவனத்திற்கு இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கபப்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் விநியோக நடவடிக்கையினை ஆரம்பித்த சீனாவின் சினோபெக் நிறுவனம் தற்போது இரண்டு பிரிவுகளில் எரிபொருள் விநியோகத்தை மேம்படுத்தியுள்ளது.

அத்துடன், சினோபெக் நிறுவனம் அனைத்து வகையான எரிபொருளையும் ஏனைய நிறுவனங்களை விட மூன்று ரூபா குறைவான விலையில் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், RM Parks நிறுவனம் உள்நாட்டு சந்தை விலையை விலை குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles