NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு..!

இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 21,298 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவிலிருந்து 5,245 பேரும், பிரித்தானியாவிலிருந்து 1,741 பேரும், சீனாவிலிருந்து 1,422 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 547 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles