NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உப்பு விலை மேலும் அதிகரிக்கும்!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகு உப்பு விலை குறைவடையும் என ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின
தலைவர் வு.நந்தன திலக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles