NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடன் தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை வங்கி மேற்கொண்டுள்ளது.

குறித்த கடன் தொகை பதினைந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சையில் மூன்று முறை சித்தியடைந்த மாணவர்கள் மாத்திரமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும்,இந்தக் கடன் வட்டியில்லாத மற்றும் பட்டப்படிப்பிற்குப் பின்னர், ஒரு வருட சலுகைக் காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles